தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

இதுவரை தென்னிந்திய அளவில் தளபதியாக இருந்த நடிகர் விஜய், 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தும் அவர் காட்டும் எளிமை தான் அவரை மென்மேலும் உயர்த்தி வருகிறது. மேலும் அவர் விளம்பரம் இன்றி செய்து வரும் பல்வேறு உதவிகள் எண்ணிலடங்கா. சமூகம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் செயல்படுவதை போலவே அவரது ரசிகர்களும் அவ்வபோது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு  ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த  நலத்திட்டஉதவிகள் இதோ :

*100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள் ,
*40 சில்வர் பாத்திரங்கள் ,
*50 சில்வர் குடங்கள் ,
*10 மண்வெட்டிகள் ,
*1 கன்றுக்குட்டி

இவை அனைத்தையும் மதுரை மேலூரில் உள்ள  ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு  மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA )  அவர்கள் வழங்கினார்..

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி  தலைவர் விஜய் அன்பன் ,கல்லானை தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

More News

அமலாபாலின் மனித நேய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி தங்களுடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு அவ்வபோது சில மனிதநேயமிக்க செயல்களை செய்வதை பார்த்து வருகிறோம்

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் உருக்கமான வேண்டுகோள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரின் பிறந்த நாள் வரும் 7ஆம் தேதி வரவுள்ளது. இதனையடுத்து அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்

கண்ணீரை வரவழைக்கும் ஜான்விகபூரின் உருக்கமான கடிதம்

இந்தியாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் திடீரென மரணம் அடைந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவரது குடும்பத்தினர்களையும் நிலைகுலைய செய்தது.

விஷாலின் 'இரும்புத்திரை' சென்சார் தகவல்கள்

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் கண்ணடிக்கும் ப்ரியாவாரியர்

'ஒரு ஆடார் லவ்' படத்தின் நாயகி ப்ரியாவாரியர் அந்த படத்தின் டீசரில் ஒரு காட்சியில் ஆடிய புருவ நடனமும், கண்ணசைவும் இந்திய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.