ஆபத்தான நிலையில் மதுரை கொரோனா நோயாளி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்

சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த ஒரு இளைஞரும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் லண்டனில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டிருந்தது

அதேபோல் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இவர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் எந்த வித தொடர்பும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு ஏற்கனவே பல்வேறு நோய்கள் இருந்ததால் இவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

இணையத்தில் வைரலாகும் விஜய் பைக் சேசிங் காட்சி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய்சேதுபதி கொடுத்தது எவ்வளவு?

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவிகளை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

பெப்சி தொழிலாளர்களுக்காக கலைப்புலி தாணு செய்த உதவி!

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் சினிமா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் சிக்கலில் உள்ளனர்

கொரோனா ஆறுதல்!!! பாதிக்கப்பட்ட 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர்!!! ICMR அறிவிப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர் என்று குறிப்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர்  பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.