வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டு இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட சில கும்பல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் மதுரை பகுதியில் கஞ்சா விற்பனை சூடுபிடித்து இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம் வேலை இழந்து இருக்கும் சிலர் இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவம் மதுரையில் அதிகரித்து இருக்கிறது என போலீஸ் தரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.

மதுரை அடுத்த வில்காபுரம் பகுதியில் வசிக்கும் வண்டு சரவணன். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில் முனியசாமி என்பவரோடு சேர்ந்து கொண்டு அவனியாபுரத்தின் செம்பூரணி பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வீடு வீடாக சென்று கஞ்சா சப்ளை செய்து இருக்கிறார். ரகசியத் தகவலின் மூலம் இதை அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து இருக்கின்றனர். மேலும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

More News

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது.

எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க: விஜய் நண்பரின் மனைவி!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ்

'I am Back'ன்னு சொல்லுங்க: தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்!

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வில்லன் நடிகராக அறிமுகமாகும் இணை இயக்குனர்!

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் டிபி கஜேந்திரன்.

2020 நிலைமைக்கு காரணம் ஒரு ஸ்பூன் அளவுதான்… கொரோனா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!!!

2020- இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று உலகத்தில் யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டர்கள்.