நடிப்பு மட்டுமல்ல.. கதையும் அவர் தான்.. மித்ரன் ஜவஹர் படத்தின் புதிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,December 02 2023]

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் மாதவன் நடித்து வரும் படத்தை இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’அதிர்ஷ்டசாலி’ என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’திருச்சிற்றம்பலம்’ படம் போலவே இந்த படமும் ஒரு ஜாலியான மற்றும் செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்டது என்றும் இதில் முக்கிய விஷயம் என்னவெனில் இந்த படத்தின் கதையை எழுதியதே மாதவன் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் ’மிரட்டல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷர்மிளா மன்ரே தான் இந்த படத்தின் நாயகி என்றும் தெரிகிறது. தற்போது ஸ்காட்லாந்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மாதவன், ராதிகா உட்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது.

More News

மாஸ் காட்சிகள்.. மிரட்டும் மேக்கிங்.. பிரபாஸின் 'சலார்' ட்ரெய்லர்..!

பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் டிரைலர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..' பிரதீப் அந்தோணியின் பதிவு..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு  கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து'

ஏன் இந்த சோதனை.. உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன்.. உருக்கமாக வெளியிட்ட அறிக்கை..!

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிம்பு ரேஞ்சுக்கு பேசுறீங்க.. அந்த அளவுக்கு இன்னும் போகல.. அசோக்செல்வனின் 'சபாநாயகன்' டிரைலர்..!

அசோக் செல்வன் நடிப்பில் உருவான 'சபாநாயகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறை: 'பருத்திவீரன்' விவகாரத்தில் 2 இயக்குனர்கள் கண்டனம்..!

கடந்த சில நாட்களாக 'பருத்தி வீரன்' விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் அமீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை தெரிவித்தார்.