20 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய விஞ்ஞானி கேரக்டரில் மாதவன்

  • IndiaGlitz, [Thursday,July 12 2018]

'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா; படங்களுக்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் மீண்டும் பிசியான நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கவுள்ளார்,.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கவுள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன் பின்னர் சிபிஐ விசாரணையில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க 20 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தினர். இந்த 20 ஆண்டுகளில் இவர் விசாரணை என்ற பெயரில் போலீஸால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. விறுவிறுப்புகள் நிறைந்த இவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்து வருகிறார்.

More News

இதையும் ட்ரோல் பண்ணுங்கள்: நெட்டிசன்களுக்கு எடுத்து கொடுத்த ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை வந்த ரஜினிகாந்த் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

ரஜினிக்கு நண்பராகும் சிவகார்த்திகேயன் பட வில்லன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங் பகுதியில் முடிவடைந்தது.

ஒரே படத்தில் இணையும் கமல்-நாசர் வாரிசுகள்

கமல்ஹாசனும் நாசரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.

ரஜினி மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவரது ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருசில குழப்பங்கள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ்' ஆரம்பம்: முதல் பலியான முன்னணி ஹீரோ

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் புயல் போல் வீசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புயல் கோலிவுட் திரையுலகை நோக்கி திரும்பியுள்ளது.