தனுஷின் 'மாரி 2' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'மாரி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தனுஷின் அட்டகாசமான இந்த ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த படம் டிசம்பர் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'மாரி 2' அடுத்த மாதம் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே டிசம்பரில்தான் சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் வெளியாகவுள்ளதாக வந்த அறிவிப்பை நேற்று பார்த்தோம்

'மாரி' முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனால் முதல் பாகத்தில் இசையமைத்த அனிருத்துக்கு பதிலாக இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது. தீபாவளி கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

செல்பி எடுத்த இளைஞருக்கு புது போன் வாங்கி கொடுத்த சிவகுமார்

சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது அவரை செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயற்சி செய்தார். இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

தீபாவளி ரேஸில் திடீரென இணைந்த தினேஷ் படம்

வரும் தீபாவளி திருநாளான நவம்பர் 6ஆம் தேதி தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.