உடுமலை சங்கர் கொலை வழக்கு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

கோலிவுட் திரையுலகில் 'கேப்டன் பிரபாகரன்' முதல் 'தீரன் அதிகாரம் ஒன்று' வரை பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு அவை நல்ல வெற்றியும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் சமீபத்தில் உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிர செய்தது. ஆறு பேர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் ஆணவ கொலைகளுக்கு முடிவு கட்ட எடுக்கப்படும் ஒரு முயற்சியின் ஆரம்பாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கின் கதையும் தற்போது திரைப்படமாகிறது. 'மாறாத சமூகம்' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் போஸ்டரில் 'தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்ற பொருத்தமான அடைமொழியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஆஇஈ திரைப்பட்டறை வழங்கும் இந்த படத்தை பங்கஜ் எஸ்.பாலாஜி இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது

More News

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

'தெறி திரைப்படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் முதல் காட்சி காணும் அனுபவத்தை பெண் ரசிகர்களுக்கும் வழங்கும் வகையில் முதன் முறையாக பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முதல் நாள், முதல் காட்சி திரையிடப்பட்டது.

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அவரது மனிதாபிமான செயல் ஒன்று வெளிவந்து அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார்.

தீரன் பட பாணியில் ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்கிய மதுரவாயில் போலீசார்,

பாலா-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே