நா.முத்துகுமார் மகனுக்கு மரியாதை செலுத்திய 'தேவி' படக்குழுவினர்

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகிய டாக்டர் கணேஷ் ஏற்பாடு செய்த இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது.
இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் நா.முத்துகுமார் சமீபத்தில் திடீரென மரணம் அடைந்துவிட்டதால் முத்துகுமாரின் மகனுக்கு நினைவுக்கோப்பை அளிக்கப்பட்டது. முத்துகுமாரின் மகன் நினைவுக்கோப்பையை பெறும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

More News

குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை நந்தகோபால். வடிவேலு

விஷால் ,தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது என்பதை அறிவோம்...

கமல்ஹாசன் பாராட்டு விழாவிற்கு சரத்குமார்-ராதாரவிக்கு அழைப்பு உண்டா? விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது...

ரஜினியின் '2.0'வில் இணைந்த பிரிட்டன் பாடகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின்...

திருமணம் குறித்து சமந்தாவின் உறுதியான தகவல்

தென்னிந்தியாவின் முன்னணி நாயகி சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்...

தந்தையை அடுத்து மகனை இயக்கும் மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான 'பகல் நிலவு' படத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளி நடித்திருந்தார்...