பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடலாசிரியர் சினேகன்,’ சினேகம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சினேகன் புகார் அளித்திருந்தார். சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்,

அதேபோல் சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகை ஜெயலட்சுமியும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சற்றுமுன் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இன்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

More News

குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது: த்ரிஷாவின் பதிவு..!

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கோலிவுட்டில் ஒரு புதிய 'ஸ்டார்' நடிகை..  மேகா ஷெட்டிக்கு குவியும் ஆதரவு..!

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன்

விவாகரத்துக்கு பின் அரசியல்.. மணிரத்னம் பட நடிகையின் தாயார் தகவல்..!

மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை விரைவில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றபின் அவர் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அவரது தாயார் பேட்டி அளித்துள்ளார். 

'மகாபாரதம்' கிருஷ்ணன் நடிகர் மீது ஐஏஎஸ் மனைவி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கிருஷ்ணன் கேரக்டரில் நடித்த நடிகர் மீது அவரது ஐஏஎஸ் மனைவி பகீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.