பாஜக பெண் தலைவர் மீது புகார் அளித்த சினேகன்: வழக்குப்பதிவு செய்த போலீசார்!

  • IndiaGlitz, [Thursday,October 27 2022]

தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி பாலாசிரியர்களில் ஒருவரான சினேகன், சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடிகையும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமி தன்னையும் தனது அறக்கட்டளை குறித்தும் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலட்சுமியும் சினேகன் மீது புகார் அளித்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என்று இருவரையும் நேரடியாக அழைத்து விசாரணை செய்த போலீசார் சமரசம் செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் இதற்கு உடன்படாத ஜெயலட்சுமி மீண்டும் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயலட்சுமியின் இந்த புகாரின் அடிப்படையில் சினேகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த மற்றொரு புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருவரும் மாறிமாறி புகார் அளித்துள்ள நிலையில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் முடிவு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அவளுக்கு பழசெல்லாம் ஞாபகம் வராதவரைக்கும் ஆபத்து இல்லை': அஞ்சலியின் 'ஜான்சி' டிரைலர்

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடித்த 'ஜான்சி' என்ற வெப்தொடர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இத்தாலியில் பிகினி உடையில் தீபாவளி கொண்டாடிய தமிழ் நடிகை!

கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் உள்பட இந்திய திரையுலகினர் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்

தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண்ணுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது: 'காந்தாரா' குறித்து ரஜினிகாந்த் டுவிட்!

 சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான 'காந்தாரா' தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

சமந்தா படத்தை புரமோஷன் செய்யும் சூர்யா: படக்குழுவினர் மாஸ் அறிவிப்பு!

சமந்தா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தை நடிகர் சூர்யா புரமோஷன் செய்யும் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.