பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

பாடலாசிரியர், நடிகர் மற்றும் அரசியல்வாதி சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பாடலாசிரியர் மற்றும் நடிகராக திரையுலகில் வலம் வந்த சினேகன், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் அவர் தான் ரன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் முதல் சீசன் முடிந்தவுடன் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சினேகன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மணப்பெண் அவருடைய நெருங்கிய உறவினரின் பெண் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தனது திருமணம் கமல்ஹாசன் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனிடம் தேதி கேட்டு இருப்பதாகவும், அவர் தேதி கொடுத்தவுடன் அந்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சினேகனுக்கு விரைவில் திருமணம் என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கு கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்: யாருடன் தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரபல மக்கள் தொடர்பாளரின் தாயார் கொரோனாவுக்கு பலி: உருக்கமான பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல மக்கள் தொடர்பாளர் ஒருவரின் தாயார் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவர் உருக்கமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமைதியுடன் நம்பிக்கையாக இருங்கள்: 'தி பேமிலிமேன் 2' சர்ச்சைக்கு இடையே சமந்தாவின் பதிவு!

பிரபல நடிகை சமந்தா நடித்த வெப் தொடர் 'தி பேமிலிமேன் 2'. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி: வீடியோ வைரல்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு போராடி வருகிறது

கருப்பு பூஞ்சையை காட்டிலும் கடுமையாக தாக்கும் வெள்ளை பூஞ்சை தொற்று...! பீகாரில் பரவல்....!

கொரோனா உலகையே உலுக்கி வரும் நிலையில், தற்போது வெள்ளை பூஞ்சை தொற்று என்ற நோய்  புதிதாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.