காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய இளைஞர் பரிதாப மரணம்

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய காதலி தன்னைவிட்டு எப்போதும் பிரிந்துவிட கூடாது என்று பயமுறுத்துவதற்காக விளையாட்டாக தூக்கு மாட்ட முயன்றபோது விளையாட்டு வினையாகி பரிதாபமாக பலியானார்.
மும்பையை சேர்ந்த சன்மித் ரானே என்ற 21 வயது கல்லூரி மாணவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர் சமீபத்தில் காதலியை சந்தித்து தன்னைவிட்டு எப்போதும் பிரிந்துவிட நினைக்க கூடாது என்றும் அப்படி பிரிய நினைத்தால் தூக்கு மாட்டி உயிரை மாய்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
வெறும் வார்த்தைகளால் கூறியது மட்டுமின்றி காதலியின் துப்பட்டாவை வாங்கி விளையாட்டுக்காக கழுத்தில் தூக்கு கயிறு போல மாட்டி பயமுறுத்தியுள்ளார்.
அந்த சமயத்தில் அவர் நின்றிருந்த நாற்காலி திடீரென தடுமாறியதால் அவரது கழுத்தை துப்பட்டா இறுக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய காதலி செய்வதறியாது திகைத்து உடனடியாக சன்மித் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த பெற்றோர், சன்மித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் சன்மித் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் திடீர் பதவி விலகல்

நேற்று முன் தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக புதிய பொறுப்பினை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார்...

விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

பாலிவுட் நடிகர் ஓம்புரி மறைவிற்கு பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிறந்த நாள் சிறப்பு பதிவு

ஆஸ்கார் பரிசு என்பது இந்திய திரையுலகினர்களுக்கு எட்டாக்கனியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் ஒரே ஆண்டில் ஒன்றில்லை இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று 100 கோடி இந்தியர்கள் மனதிலும் ஒரே நிமிடத்தில் இடம் பெற்றவர் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் மயங்காத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது.