ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. சென்னை மெரினாவில் ஆரம்பித்த சிறு பொறி இன்று உலகம் முழுவதும் பற்றி எரிகிறது. ஒவ்வொரு துறையாக ஆதரவு கொடுத்து கொண்டே வருவதால் போராட்டத்தின் தீவிரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக இன்று முதல் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் இன்று போராட்டக்களத்தில் இறங்குகின்றனர். இன்று அரசு ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.,

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக 20ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 50 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதேபோல் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழர்களின் பொதுப்பிரச்சனை ஒன்றுக்காக ஒட்டுமொத்தமாக அனைத்து துறையினர்களும் கைகோர்த்துள்ளது தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது

தடைகளை உடை. புதிய சரித்திரம் படை. நடிகர் சந்தானம்

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் சந்தானமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்...

இந்த போராட்டம் சத்யாகிரகத்தை ஞாபகப்படுத்துகிறது. பிரபல இசையமைப்பாளர்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பீட்டாவுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை மெரீனாவில் இளளஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்றாவது நாளாக தொடரந்து வருகிறது...

நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டத்தில் தல அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகில் இருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ஆதரவுக்குரல் கொடுத்து வரும் நிலையில் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மௌன அறவழி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

போராட்டத்தை அடக்க ராணுவமா? சிம்புவின் வித்தியாசமான ஐடியா

இன்று தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டத்டை ஆரம்பித்த சிறுபொறிகளில் ஒருவர் நடிகர் சிம்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான சிம்பு நேற்று இரவு 8 மணி முதல் தனது தி.நகர் வீட்டின் முன் அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளார்...