கிரேசி மோகன் வசனத்தை பார்த்து எனக்கு தாழ்வு மனப்பாண்மை வந்தது...... விவரிக்கும் விசு

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

அடுத்தவர் மனதை புண்படுத்த தெரியாது, ஒரு வசனம் சொன்னால் அதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஜோக் அடிப்பார் அதுதான் கிரேசி மோகன். அவர் எழுத்தை பார்த்து எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது என பிரபல வசனகர்த்தா கிரேசி மோகன் குறித்து மனம் திறக்கிறார் இயக்குநரும், நடிகருமான விசு.

கிரேசி மோகன் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்தவர். இது தவிர டிவி சீரியல்களில் நடித்தும், பல மேடை நாடகங்களை இயக்கியவரும் ஆவார்.

அருணாச்சலம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், காதலா, காதலா தெனாலி, பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மைக்கல் மதன காம ராஜன் போன்ற வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.

இயக்குநரும்,நாடிகரும், அரட்டை அரங்க புகழ் விசு அளித்த பேட்டியில் ......

எஸ்.வி சேகர் நடித்து, கிரேஸி மோகன் வசனத்தில் தி கிரேஸி தீவ்ஸ் இந்த பாலவாக்கம் நாடகம் பார்த்துட்டு நான் பிரமித்துவிட்டேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் அந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பாண்மை தோன்றியது.

இந்த 16 லிருந்து 30 வயதுள்ள கூட்டத்தை அப்படியே அவன் வசம் படுத்தினான். கிரேஸி என்னைவிட வயதில் சிறியவன், ஆனால் அவன் பேனா என்னை விட மூத்தது.

என்னுடைய முதல் படம் மழலைப்பட்டாளம் வாய்ப்பு எனக்கு கிரேஸி மோகனால் வந்தது.

வெறும் படங்களுக்கு வசனம் எழுதி கிரேஸி புகழ்பெறவில்லை. அவருடைய புகழ் நாடகங்களால் வந்தது. உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று, ஆயிராக்கணக்கான மனிதர்களை சந்தித்து அவர் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்.

அவர் வருத்தப்பட்டதுண்டா ? கிரேஸி மோகனுக்கு வேறு முகம் எதுவும் உண்டா என்று அவர் மனைவியிடம் கேட்க வேண்டும்.

மாது, பாலாஜி, சோர்ந்து விடாதீர்கள். சோகத்தை முதுகுக்குப்பின் வைத்துக்கொண்டு எழுந்து வாருங்கள். ஆல் தி பெஸ்ட் டு crazy ட்ரூப்ஸ்

என இயக்குநர் விசு பேசியுள்ளார்.

More News

மூட்டை மூட்டையாக காதல் கடிதம்... பெண்கள்தான் அவர் பின்னாடி போனாங்க... கமலா செல்வராஜ்

கமலா செல்வராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான மகப்பேறு மருத்துவர் ஆவார் . தமிழ் திரைப்பட நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளாவார்.

குடியை ஏன் அம்மா துணையா தேர்ந்தெடுத்தீங்க..... நடிகையர் திலகம் குறித்து ஜெயசித்ரா

நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

குடியை ஏன் அம்மா துணையா தேர்ந்தெடுத்தீங்க..... நடிகையர் திலகம் குறித்து ஜெயசித்ரா

நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

அரசியல் வாதிகளின் Bio pic எடுத்தா நாறிப்போயிடும் சௌகார் ஜானகி சொல்லும் உண்மை

சௌகார் ஜானகி தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை. 1931 ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். நாயகியாகவும்,

மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் - பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.