'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் ’லியோ 2’ உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ், ‘தற்போது தான் ’தலைவர் 171’ படத்தின் திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் நிறைய எழுத வேண்டிய இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ரஜினி அவர்களை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆரம்ப கட்ட பணிகளுக்கு காலம் இருப்பதால் அதன் பின்னர் தான் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த தகவலை வைத்து பார்க்கும் போது ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் இன்னும் காலதாமதம் ஆகும் என்றும் தெரிகிறது.

அதேபோல் விஜய் நடித்த ’லியோ’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்விக்கு ’இன்னொரு நாள் இதற்கு பதில் சொல்கிறேன், தற்போது இன்றைய நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கேள்வி மட்டும் கேளுங்கள்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

More News

ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து

19 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. பிரபல நடிகருக்கு மகளாக நடித்தவர்..!

பிரபல நடிகருக்கு மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?

நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

கோபித்து கொண்ட ரசிகர்.. 'சென்னைக்கு வா பிரதர்' என சமாதானம் செய்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவி மீது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோபித்துக் கொண்ட நிலையில் 'சென்னைக்கு வாருங்கள்' என்று அவரிடம் கூறி சமாதானம் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.