தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக கூட்டம் கூட கூடிய சந்தை பகுதிகளில் வெட்டவெளியில் தனித்தனி கடைகளாக அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் 50 சதவீத மாணவர்கள் அனுமதிப்பது பற்றிய ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கான வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News

90களில் ஹிட் நாயகி… மகள்களுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்

வெளியே இப்படி பேசாத, நம்முடையது சொகுசு கார் தான்......! கிருத்திகாவிற்கு அறிவுரை கூறிய மதன்....!

நாம் வைத்துள்ள கார் சொகுசு கார் தான், வெளியே நீ அப்படியெல்லாம் பேசாத என்று பப்ஜி மதன், மனைவி கிருத்திகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக்: ஒருசில மணி நேரங்களில் நடந்தது என்ன?

தல தோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூடிக் திடீரென நீக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கொந்தளித்து இருந்ததால் சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் நிர்வாகம் அவருடைய

ராகவா லாரன்ஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கோலிவுட் திரையுலகில் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதும் அவர் தற்போது 'ருத்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

மிக்சிங் சரியில்ல… மது அருந்தியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

இங்கிலாந்து நாட்டில் நைட் கிளப்புக்கு சென்ற இளம்பெண் ஒருவர் மது அருந்தியபோது திடீரென கைக் கால்களை இழுத்துக்கொண்டு