எல்.கே.ஜி வெற்றியால் பயனடைய போகும் கஜா பாதித்த பகுதிகள்

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி. திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்கால அரசியல் நிகழ்வுகள், கச்சிதமான திரைக்கதை, ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் பாத்திரப்படைப்பு, கிளைமாக்ஸில் சொல்லும் கருத்துக்கள் ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணங்கள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், இயக்குனர் பிரபு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் வெற்றி விழாவுக்கு பின் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி, 'நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை விட அதிக வெற்றியை தந்த ரசிகர்களுக்கு எங்களது நன்றிகள்! இப்போது நாங்கள் உங்களுக்கு திருப்பி தர வேண்டிய நேரம் இது. கஜா புயலால் பாதித்த பகுதிகளில் உள்ள பத்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வெற்றியால் டெல்டா பகுதியில் உள்ள பத்து பள்ளி மாணவர்கள் பயனடைய போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்யாவுக்கு விடை கொடுத்து அனுப்பிய 'காப்பான்' படக்குழு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

என்னாலும் வாக்குகளை பிரிக்க முடியும்: கருணாஸ் ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா, தினகரன், திமுக என மாறி மாறி ஆதரவு கொடுத்து கொண்டிருந்த நடிகரும் எம்.எல்.வுமான கருணாஸ்

சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது

'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' சென்சார் தகவல்

'பியார் பிரேமா காதல்' வெற்றி படத்தை அடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாகும்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்!

தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்யுமாறு வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்