மதுரை மதுப்பிரியர்கள் சாதனை....! கோடிகளில் குவியும் டாஸ்மாக் கல்லா...!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக, மது விற்பனை துவங்கியதையடுத்து, மதுரையில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர, இதர 27 மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள், சென்ற 2 தினங்களாக திறக்கப்பட்டுள்ளது. பல கட்சிகள் மதுபானக் கடைகள் திறக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்திய நிலையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதை தமிழக மதுபிரியர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். மதுபானங்களை வாங்கி, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு குடிக்கும் அளவிற்கு அடிமையாகி விட்டார்கள். டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் செய்யும் அட்டூழியம், மதுவாங்க வரிசையில் காத்திருக்கும் குடிமகள்கள் என இரண்டு நாட்களாக பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காலை 10 மணிமுதல், மாலை 5 மணிவரை மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில், கடை திறந்த முதல் நாளே கல்லாவில் வசூல் கலை கட்டியது என சொல்லலாம்.

முதல் நாளான, ஜூன் 14 ஆம் தேதி வசூலான மது விற்பனை மதிப்பு - ரூ. 164.87 கோடி

முதலிடம் பிடித்த மதுரை - ரூ. 49.96 கோடி
சென்னை - ரூ.42.96 கோடி

இரண்டாம் நாளான ஜூன் 15-ஆம் தேதி வசூலான மது விற்பனை மதிப்பு - ரூ. ரூ.127.09

மதுரை - ரூ.37.28 கோடி
சென்னை - ரூ.33.41 கோடி
திருச்சி - ரூ. 27.64 கோடி
சேலம் - ரூ.28.76 கோடி

இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.291.96 கோடிக்கு மது விற்பனை வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சஞ்சீவ்க்கும் எனக்கும் இருக்கும் உறவுமுறை: வனிதா அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா குறித்த சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பதும், அதற்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்து

யூடியூபர் மதன் சார்பில், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்...!

ஆன்லைன் மூலமாக மட்டும் யூடியூபர் மதன் மீது 150-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக, மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் மூலமாக வந்த செய்திகள் கூறுகின்றது.

ஓடிடியில் 'மாநாடு' ரிலீஸா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்க போக்கும் ஆச்சரியம்?

இந்த ஆண்டு விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தடுப்பூசி போட்டதும் டிரேட்மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய 'குக் வித் கோமாளி' ரித்திகா!

கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்காமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர்