'லைகர்' படுதோல்வியால் அதிர்ச்சி அடைந்த சிம்பு பட நடிகை: ஆறுதல் கூறிய விஜய் தேவரகொண்டா!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கரன் ஜோகர், பூரி ஜெகன்நாத் ஆகியோர்களும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் என்றாலும் சார்மிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று என்று தெரிகிறது.

சிம்புவின் ’காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமாகி அதன்பின் ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து அவர் கடந்த பல வருடங்களாக சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக இதில் இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘லைகர்’ பட தோல்வியால் அதிர்ச்சியில் இருந்த சிம்பு பட நடிகை சார்மிக்கு ஆறுதல் கூறும் வகையில், தான் வாங்கிய சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை நடிகர் விஜய் தேவரகொண்டா சார்மியிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘லைகர்’ திரைப்படம் இதுவரை 50 முதல் 60 கோடிகள் மட்டும்தான் வசூல் செய்துள்ளது என்றும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை ஆகியவைகளை சேர்த்தாலும் சுமார் 30 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பிக் கொடுத்து விட்டதால் நஷ்டம் ஓரளவு குறையும் என்று தெரிகிறது.

ஏற்கனவே ’லால்சிங் சத்தா’ என்ற படம் படு தோல்வியை சந்தித்ததால் அமீர்கான் தனது சம்பளம் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.