சென்சாருக்கு சென்று வந்த 'லியோ' டைட்டில் டீசர்.. எதற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘லியோ’ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியானது என்பதும் இரண்டு நிமிடங்களுக்கு மேலிருந்த இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் டீசர் சென்சாருக்கு சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. வரும் 17ஆம் தேதி தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இடைவேளையின்போது ‘லியோ’ படத்தின் டீசரை வெளியிட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே டைட்டில் டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.