ரோகிணி உட்பட அனைத்து தியேட்டர்களிலும் 'லியோ'.. ஆனாலும் சில அதிருப்திகள்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நேற்று ’லியோ’ திரைப்படம் திரையிடப்படவில்லை என அறிவிப்பு பலகை வைத்த நிலையில் தற்போது அந்த தியேட்டர் உட்பட சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ’லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அதே நேரத்தில் காலை 9 மணி முதல் காட்சி தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்த நிலையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் 11:30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ரோகிணி திரையரங்கில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சென்னையின் பல திரையரங்குகளில் 9 மணி காட்சி திரையிடப்பட்டாலும் ஒரு சில முக்கிய திரையரங்குகளில் 10,30, 11,30 என காட்சிகள் ஆரம்பமாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இன்று அதிகாலை 4 மணிக்கு இந்தியாவின் பல பகுதிகளில் ’லியோ’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக விஜய் ரசிகர்கள் மற்றும் இன்னும் படத்தை பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.