'லியோ' அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி.. தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Monday,September 25 2023]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில நாடுகளிலும், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வட அமெரிக்காவில் அதிகாலை 4 மணி மற்றும் 6.40 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதேபோல் பிரிட்டனில் அதிகாலை 5.10 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் ’லியோ’ படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் கேரளா, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் முதல் காட்சி முடிந்த பிறகு தான் தமிழகத்தில் முதல் காட்சி ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'குட் நைட்'  மணிகண்டன் அடுத்த படத்தை இயக்கிய யூடியூப் பிரபலம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு சூப்பர் ஹிட் படமான  'குட் நைட்' திரைப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.. விஜய் சேதுபதி கூறிய ஆச்சரிய தகவல்..!

ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' என்ற படத்தில் தான் நடித்ததாகவும் அந்த படத்தில் நடிக்க எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

'லியோ' தயாரிப்பாளர் மிரட்டப்பட்டாரா? சவுக்கு சங்கர் ட்விட்டிற்கு லலித் விளக்கம்..!

'லியோ' தயாரிப்பாளர் திமுக குடும்பத்தினரால் மிரட்டப்பட்டார் என சவுக்கு சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித் அதனை மறுத்துள்ளார்.

மீனா கைக்கு வந்தது வீட்டுப்பத்திரம்.. விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் மிகக் குறைந்த நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பது

'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நடந்தது.