close
Choose your channels

பழம்பெரும் படத்தொகுப்பாளர் காலமானார்

Thursday, March 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் முன்னணி படத்தொகுப்பாளராக இருந்த பழம்பெரும் எடிட்டர் டி.ஆர்.சேகர் காலமானார். அவருக்கு வயது 81

திருச்சியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 80ஆம் ஆண்டுகளில் பல முன்னணி இயக்குனர்களின் படங்களை இவர் எடிட்டிங் செய்துள்ளார். குறிப்பாக தமிழ், மலையாள மொழியில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாசில் படங்கள் அனைத்திற்கும் இவர்தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது

கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை, கிளிப்பேச்சு கேட்கவா, அரங்கேற்றவேளை, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே போன்ற பல வெற்றி படங்களை இவர் எடிட்டிங் செய்துள்ளார்.

டி.ஆர்.சேகர் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment