லெஜண்ட் சரவணனின் 2ஆம் படம்.. இன்று முக்கிய பணி.. கதை என்ன? படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

பிரபல தொழிலாளர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடமை 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவரது இரண்டாம் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ தனுஷ் நடித்த ’கொடி’ உட்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் தான் லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் லுக் டெஸ்ட் தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து ஏப்ரல் மாதம் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கார் சேஸிங் மற்றும் ஆக்சன் கதையம்சம் கொண்டது என்றும் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது.

மேலும் முதல் படம் போலவே இரண்டாவது படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்க லெஜண்ட் சரவணன் முடிவு செய்துள்ளதாகவும் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் துரை செந்தில்குமார் தற்போது தான் இயக்கி முடித்துள்ள ’கருடன்’ படத்தின் தொழில்நுட்ப பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் அந்த பணியை முடித்தவுடன் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கொடூரா வில்லனாக மாதவன்.. ஜோதிகாவை உலுக்கி எடுக்கும் காட்சிகள்:  'சைத்தான்' டிரைலர்...!

அஜய் தேவ்கன், ஜோதிகா மற்றும் மாதவன் நடித்த 'சைத்தான்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ்-க்கு தயாராகியுள்ளது.

இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா? விஷயம் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்: நடிகை பிரியாமணி

இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா என்று விஷயம் தெரிந்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று பிரபல நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.

234ஐ 100ஆக மாற்றிய விஜய்.. உறுப்பினர்களை சேர்க்க செயலி.. வேற லெவலில் தவெக..!

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் கூட்டம் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்ததாகவும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும்

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஏ.வி.ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜூவுக்கு த்ரிஷா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக அரசுக்கு எதிரான மனு விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.