முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வைத்த மூன்று கோரிக்கைகள்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

மாணவர்கள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் உதவி செய்து வந்தவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. போராட்டத்தின் கடைசி நாளன்று ஏற்பட்ட வன்முறையின்போதும் அவர் பதட்டத்தை குறைக்க மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ராகவா லாரன்ஸ் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தின் இந்த கோரிக்கைகள் குறித்து கூறியவதாவது:

நண்பர்களே, ரசிகர்களே..நான் உங்களிடம் தற்போது ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று நானும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருசில மாணவர்களும் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தோம். நாங்கள் அவரிடம் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தோம். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை. இரண்டாவதாக போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கலவரத்தினால் காயம் அடைந்த அனைத்து தரப்பினர்களுக்கும் உடனடியாக உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது. மூன்றாவதாக வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதிப்பது.

மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் நாங்கள் முதல்வர் அவர்களிடம் முன்வைத்துள்ளோம். முதல்வர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். மேலும் ஜல்லிக்கட்டுக்காக முதல்வர் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவரிடம் எங்களது நன்றியையும் தெரிவித்து கொண்டோம்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

பார்வையற்றவர்களுக்காக சிறப்பு சலுகை செய்த 'அதே கண்கள்' தயாரிப்பாளர்

கலையரசன் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த குடியரசு தினத்தில் வெளியாகி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நிவின்பாலி-நட்டி நட்ராஜ் பட டைட்டில் அறிவிப்பு

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஒன்றை அறிமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை. செல்போன் கேமிராவில் வீடியோ பதிவு

கேரள மாநிலத்தில் கள்ளக்காதல் ஜோடி தனத்தனியாக ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலையை இருவரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

புனே இன்போசிஸ் அலுவலகத்தில் கேரள இளம்பெண் கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலையான பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது புனே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த இளம்பெண் ரசிலா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...

'தல 57' படப்பிடிப்பின் புதிய அப்டேட்

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்கேரியா உள்பட ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும், ஐதராபாத்திலும் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது...