ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் தமிழ்ப்பாடல் மட்டுமே பாடியதாக குற்றம் சாட்டி லண்டன்வாழ் வட இந்திய ரசிகர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் வட இந்தியர்கள், ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு இந்தியாவின் பல பிரபல பாடகர், பாடகிகள் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். நம்முடைய இசை ரசிகர்களில் சிலர் மிகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். 70 வருட அனுபவத்தில், பஞ்சாபி, பெங்காலி மற்றும் டோக்ரி உட்பட மேடையில் பல பிராந்திய மொழி பாடல்களை பாடியுள்ளேன். பார்வையாளர்கள் ஒவ்வொரு இந்திய மொழியிலும் எனது பாடல்களை ரசித்து கேட்டனர்.
இசைக்கு மொழி என்பதே கிடையாது. ரஹ்மான் பல புகழ்பெற்ற பாடல்களை தமிழில்தான் பாடியுள்ளார். அவற்றில் ஒருசில பாடல்கள் இந்தியிலும் வெளிவந்து, சம அளவில் புகழ்பெற்றது. இசையில் மொழியை புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது.
நான் எந்த மொழியில் பாடுவதென்றாலும் விரும்பியே பாடுவேன். ஒருசில பாடல்களின் அர்த்தம் எனக்கு புரியாமல் இருந்தாலும் இசையை ரசித்தே பாடுவேன். என்னுடைய ஒரே பயம் தெரியாத மொழியில் பாடும்போது உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான். கடவுள் கிருபையால் அதுபோன்ற குற்றச்சாட்டு என்மீது இதுவரை வரவில்லை' என்று கூறியுள்ளார்.

More News

ஒரே படத்தில் உச்சத்தை தொட சிம்புவுக்கு அரிய வாய்ப்பு

சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அவர் சேர்த்து வைத்திருந்த இத்தனை ஆண்டுகால நல்ல பெயரை ஒரே படம் தகர்த்தெறிந்துவிட்டது.

பிக்பாஸ் ஆர்த்தியின் முதல் டுவீட்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.

சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார்...

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாகவும், ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாகவும் கூறினார்.