ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் நாட்டில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இருப்பினும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை ஒருசில இடத்தில் மட்டும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் போன்ற இடங்களில் நவம்பர் 24 வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை இன்று நள்ளிரவு 12 மணிக்குள் மேற்கண்ட இடங்களில் மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை இன்றுக்குள் மாற்ற முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிக்கணக்கில் செலுத்திக்கொள்ளலாம், அல்லது மார்ச் 31ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

More News

மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் மோதும் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி...

சன்னிலியோனின் புதிய அவதாரம். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸ்ஸம் 2' ...

இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின்...

ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்

விஷ்ணுவுடன் முதன்முறையாக இணையும் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்த நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.