'லால் சலாம்' சக்சஸ் மீட்.. முக்கியமான ரெண்டு பேரை காணவில்லையே

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் தற்போது நடந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் நடித்த இரண்டு முக்கிய பிரபலங்கள் இந்த சக்சஸ் மீட்டுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’லால் சலாம்’.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூட இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் குழப்பமான திரைக்கதை, ஏஆர் ரகுமானின் சுமாரான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் மைனஸ்களாக கூறப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் கேரக்டர் மட்டுமே ஓரளவு பிளஸ் ஆக இந்த படத்தில் இருந்ததாக விமர்சனங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்த நிலையில் இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தில் இரண்டு முக்கிய கேரக்டரில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது லைக்கா நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது.

More News

தமிழ் தேசிய அரசியல்னா என்ன? : மோகன் ஜீ கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த சீமான்

தமிழர்களுக்காகவும், தமிழ் நிலத்திற்காகவும் பேசும் அரசியலே தமிழ் தேசிய அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு நடிக்க வந்தேன் - பிரபல நடிகர் உருக்கம்

மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்ததாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 'கோட்' சிங்கிள் எப்போது? ரசிகரின் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆவது எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு

ஆன்மீக பாதையில் சரத்குமார் - ராதிகா தம்பதி.. சொந்த பந்தங்களுக்கு தெரிவித்த நன்றி..!

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சரத்குமார் - ராதிகா தம்பதிகள் ஆன்மீக பாதையில் சென்றுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில்

கையில் க்யூட் குழந்தை.. ஆனால் முகம் சுளிக்க வைக்கும் காஸ்ட்யூம்.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரேயா சரண் தனது கையில் மகளை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரது க்யூட் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் ஸ்ரேயா