பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முன்னணி தமிழ் நடிகை?

’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் முன்னணி நடிகை லட்சுமி மேனன் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ’பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியிலேயே லட்சுமிமேனன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் ஒருசில காரணங்களால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு அவர் சினிமா வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் கலந்து கொண்டால் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி ஒரு சுற்று வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரது பெயரில் ஆர்மி தொடங்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன், புகழ், ரியோ ராஜ் உள்பட ஒருசிலர் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

More News

நீட் தேர்வு பயத்தால் 19 வயது சிறுமி தற்கொலை… தொடரும் அவலம்…

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த  19 வயது சிறுமி தற்கொலை செயĮ

தனக்குத் தானே RIP டுவீட் போட்டுக்கொண்டாரா மீராமிதுன்? அல்லது ஹேக்கர்கள் கைவரிசையா?

சூப்பர் மாடலும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது தெரிந்ததே

அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு

அமலாபால் கணவராக நடித்த நடிகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் 

வடிவேல் பாலாஜி உடல் நல்லடக்கம்: கதறியழுத உறவினர்கள்- நண்பர்கள்

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நல கோளாறு காரணமாக திடீரென மரணம் அடைந்தது சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

காலையில் கணவர், மாலையில் மனைவி: இறப்பிலும் இணைபிரியாத 75 ஆண்டுகால அரியலூர் தம்பதிகள்!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 ஆண்டுகால தம்பதிகள் காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது