close
Choose your channels

நயன்தாராவை முதன்முதலில் அழவைத்த டிடி!

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பேட்டிவிஜய் டிவியில் இன்று ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேட்டியில் பல சுவராசியமான நகைச்சுவை அம்சங்கள் இருந்தன. ஆனால் இதில் நயன்தாராவை டிடி அழவைத்த ஒரு காட்சியும் உள்ளது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி என்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாடலை அவர் பாடிய போது நயன்தாராவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை பார்க்க முடிந்தது. அதன் பின் நயன்தாராவுடன் பேசிய திருமூர்த்தி ’நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக நடித்ததில் உள்ள அனுபவம் குறித்துக் கூறுங்கள் என்று கேட்டபோது ’உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுடைய உலகமே ஒரு அழகான உலகம். நாங்கள் இந்த உலகத்தை பார்த்தாலும் அதில் 50 சதவீதம் தான் நல்ல விஷயங்களை பார்க்கிறோம். மீதி 50 சதவீத விஷயங்களை ஏன் பார்த்தோம் என்றும் நாங்கள் வெறுத்துப் போனது உண்டு.

ஆனால் உங்கள் உலகம் அப்படி அல்ல. நாங்கள் பார்க்க விரும்பாததை, நாங்கள் பார்த்து வெறுத்துப்போனதை நீங்கள் பார்க்காமல் இருப்பதே உங்களுக்குரிய பெரிய வரம் என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் இந்த பகுதி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment