திருமணத்திற்கு பின் நயன்தாரா வெளியிட்ட முதல் அறிக்கை: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் முதன்முதலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

’காட்பாதர்’ திரைப்படத்தை வெற்றி படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் திரையரங்கில் இந்த படத்தை கொண்டாடிய அனைவருக்கும் எனது நன்றி.

’காட்பாதர்’ திரைப்படம் மிகச்சிறந்த படம். இந்த படத்தில் இருப்பவர்கள் அனைவருமே மிகவும் அற்புதமானவர்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் மீண்டும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக நான் கருதுகிறேன். அவர் வைரம் போன்றவர். எப்போதும் உற்சாகத்துடன் இருப்பார். அவர் செட்டில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவுகளை கொண்டது.

எல்லோரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் அவர்களும் இந்த படத்தில் நடித்ததால் இந்த படம் வலுப்பெற்றது. அவருக்கு என் நன்றி.

மேலும் சத்யதேவ், தான்யா போன்ற நடிகர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் தங்கள் திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்தனர்.

ஆர்பி சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக புரமோஷன் செய்து வெற்றி படமாக்கினார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அனைத்து குழுவினருக்கும் எனது நன்றி. ’காட்பாதர்’ படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் உண்மையான 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பலரது பெயர்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளன. 

தீபாவளி திருநாளில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 'மாநாடு' , 'வெந்து தணிந்தது காடு' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிம்புவின்

ஹன்சிகா நடிக்கும் அடுத்த தமிழ் திரைப்படம்: ஹீரோ, இயக்குனர் இவர்கள் தான்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதுக்கு மேல என்ன கிளாமர் இருக்கு? யாஷிகாவின் வைரல் இன்ஸ்டா போஸ்ட்!

தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு

ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.. இயக்குனர் இவர் தான்!

நடிகர் ஆர்யா நடித்த 'கேப்டன்'  திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.