இன்ஸ்டாவுக்கு அதிரடியாக வந்த நயன்.. முதல்முறையாக குழந்தைகளுடன் செம்ம ஸ்டைல்..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

நடிகை நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்தில் இல்லாத நிலையில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். இதில் அவர் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவ்வப்போது விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நயன்தாரா மற்றும் அவரது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும்.

இந்த நிலையில் எந்த சமூக வலைதளத்தில் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி தனது இரண்டு குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அலப்பறை தீம் பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவின் கேப்ஷனாக ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்றும் நயன்தாரா பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் இதுவரை நயன்தாரா தனது குழந்தைகளின் முகத்தை சமூக வலைதளத்தில் காண்பிக்காத நிலையில் முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை சமூக அலுவலகத்தில் காண்பித்துள்ளார். நயன்தாரா போலவே குழந்தைகளும் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.