வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிறந்தநாளில் போது தான் ஒரு கவிதை பாட போவதாக நிக்சன் பூர்ணிமாவிடம் கூறுகிறார். அந்த கவிதையையும் அவர் வாசித்துக் காட்டுகிறார்.

இதனை அடுத்து அந்த கவிதையை கேட்டு ஆச்சரியம் அடைந்த பூர்ணிமா ’எப்படிடா இப்படி எல்லாம் எழுதுற, வெளியில போய் நம்பர் குடு’ என்று கேட்கிறார். இதனை அடுத்து ’என்னுடைய நம்பரை நீ வாங்கி என்ன செய்யப் போகிறாய், உன் நம்பரை எனக்கு கொடு, நீ வெளியில போய் நிக்சனை தெரியும் என்று சொன்னால் உனக்கு எந்த பெருமையும் கிடையாது, ஆனால் எனக்கு உன்னை எல்லாம் தெரியும் என்றால் பெருமை என்று கூறுகிறார்.

அதற்கு பூர்ணிமா ’வெளிய போனதுக்கு அப்புறம் நான் தான் நிக்சனை எனக்கு தெரியும்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன் என்று சொல்ல, ’அதெல்லாம் இல்ல மனசுக்குள்ள பாசம் இருந்தா போதும்’ என்று நிக்சன் சொல்கிறார்.

போகிற போக்கை பார்த்தால் நிக்சன் - பூர்ணிமா ரொமான்ஸ் ஆரம்பம் ஆகிவிடுமோ என்று பார்வையாளர்கள் இந்த உரையாடலுக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.