close
Choose your channels

ஐந்து மொழிகளில் உருவாகும் த்ரில் படத்தில் முன்னாள் முதல்வரின் மனைவி!

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்பி ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களிலும் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி ஆவார். இவர் தற்போது ஒருசில வருடங்கள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கும் த்ரில் படம் ஒன்றில் குட்டி ராதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘தமயந்தி’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை நவரசன் என்பவர் இயக்கவுள்ளார்.

அருந்ததி, பாகிமதி போன்ற த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகியதாகவும், ஆனால் அவர் ஏற்கனவே ஒருசில படங்களில் பிசியாக இருப்பதால் குட்டி ராதிகாவை அணுகி கதை கூறியதாகவும், கதையை கேட்டவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் நவரசன் தெரிவித்துள்ளார். 

சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரான ராவ் பகதூர் அரசன் கேரக்டரிலும் அவருடைய மகளாக குட்டி ராதிகாவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.