1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் புகார் கூறி வரும் நிலையில் பல நடிகைகள் ஸ்ரீரெட்டி கூறுவதில் உண்மை இல்லை என்றும், சினிமாவில் நடிகைகள் மதிப்புடன் நடத்தப்படுவதாக பேட்டி அளித்தனர். இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் நடிகை குட்டி பத்மினி, கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பலர் திறமையின் அடிப்படையில் சினிமாவுக்கு வருவதில்லை என்றும் சினிமாவில் நுழைந்தவுடனே த்ரிஷா, நயன்தாரா ஆக வேண்டும், பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சினிமாவுக்கு வருவதாகவும், அவர்களது ஆசை நனவாகாத போது ஏமாற்றம் அடைந்து சிலர் தற்கொலையும் ஒருசிலர் ஸ்ரீரெட்டி போன்று பேட்டி அளித்தும் வருவதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

ஸ்ரீரெட்டி சொல்லும் லிஸ்ட்டை கேட்கும்போது வருத்தமாக உள்ளது. இவ்வளவு பேர் அவரை பயன்படுத்தியும் ஒருவர் கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்பது ஒரு சோகமே. இருப்பினும் ஸ்ரீரெட்டி செய்தது முழுக்க முழுக்க தவறு. படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலமே வாய்ப்பை பெறலாம் என்ற அவருடைய நோக்கம் தவறு. அவரை யாரும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவருடைய சம்மதத்துடன் தான் அனைத்தும் நடந்துள்ளது. எனது திறமையை மதித்து வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள், இல்லையென்றால் சினிமாவே தேவையில்லை என்று அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும். நாம் தவறு செய்தாலும் பரவாயில்லை, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பதே ஒரு தவறுதான். சினிமா மட்டுமின்றி எல்லா துறையிலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் அதே நேரத்தில் நாம் இடம் தராமல் தப்பு நடக்க வாய்ப்பே இல்லை.

இவ்வாறு குட்டி பத்மினி கூறியுள்ளார்.

More News

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ்

தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தனுஷூக்கு இணையாக முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார்.

மோகன்லாலுக்கு எதிராக வழக்கா? பிரகாஷ்ராஜ் விளக்கம்

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், சமீபத்தில் நடிகை ஒருவரை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்து கொள்ள சம்மதித்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழையும் விஜய் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் யாரும் பார்வையாளர்களின் மனதை தொடாத நிலையில் பிக்பாஸ் ஸ்கிரிப்டில் புதிய போட்டியாளர்கள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பா? நிர்மலா சீதாராமன் டுவீட்டால் பரபரப்பு

தமிழக துணை முதல்வர் இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாக இன்று காலை செய்தி வெளிவந்தது.