விஜய்யின் 'வாரிசு' படத்தில் குஷ்பு நடிக்கின்றாரா? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,October 05 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக சரத்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருடன் ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட குஷ்புவின் புகைப்படத்தால் ‘வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடிப்பதாகவும் படப்பிடிப்பிற்காக தான் அவர் வந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே விஜய் மற்றும் குஷ்பு இணைந்து ’வில்லு’ மற்றும் ’மின்சார கண்ணா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த நிலையில் மீண்டும் ‘வாரிசு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பு கூறிய போது, ‘வாரிசு’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் ‘வாரிசு’ படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு நான் சென்றபோது பிரபு மற்றும் சரத்குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றும் மற்றபடி ‘வாரிசு’ படத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
 

More News

மாலத்தீவில் செம ரொமான்ஸ்.. சமீபத்தில் திருமணமான நட்சத்திர தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள்!

சின்னத்திரை தொடர்களில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜோடி ஆகி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆல்யா மானசா -சஞ்சய், சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல்

53வது மாடி.. 5384 சதுர அடி.. ரூ.48 கோடியில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நடிகை!

53வது மாடியில் 5384 சதுர அடியில் ரூபாய் 48 கோடிக்கு பிரபல நடிகை ஒருவர் அபார்ட்மெண்ட் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள்': பிரபல இசையமைப்பாளரின் திருமண புகைப்படம் வைரல்!

 தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிளுக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது என தமிழ் நடிகர் ஒருவர்

3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' பட டீசர் ரிலீஸ்!

ஆதி புருஷ்' படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது

என் வீடு என்றென்றும்  திறந்து இருக்கும், 24 மணி நேரமும் அன்னதானம்: லெஜண்ட் சரவணன்

 மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுவதாகவும் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.