சுயநலவாதிகள்.. விவாகரத்து செய்பவர்கள் குறித்து நடிகை குஷ்புவின் சாட்டையடி பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

திரை உலகில் விவாகரத்து செய்யும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபகாலமாக தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர் விவாகரத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், விவாகரத்து செய்பவர்கள் சுயநலவாதிகள் என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

தன் குடும்பத்தை எல்லாவற்றிற்கும் மேல் மதித்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன். தனது குடும்பத்தை நேசிக்கும் ஒருவனது தனிப்பட்ட தேவைகள் எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிடும்.

வாழ்க்கையின் முக்கியமான அங்கம் திருமணம். வாழ்வில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு மனிதன் தனது குடும்பத்தை பிரிவதற்கான உரிமையை இதனால் எடுத்துக் கொள்ளக்கூடாது. காலப்போக்கில் கணவன்-மனைவி இடையேயான பந்தத்தில் அன்பு குறையலாம், ஆனால் பரஸ்பர மரியாதை குறையக் கூடாது.

நம்முடைய குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன் தான் உண்மையான மனிதன். மனைவியை விட்டு செல்பவன் உன்னதமான மனிதன் இல்லை. தங்களது பிரிவால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத சுயநலவாதிகள். மனித நேயம் இல்லாதவர்கள், சரியான புரிதல் இல்லாமல் தான் இதை செய்கிறார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு அழகான சுழற்சி சக்கரம். சுயநலத்தால் நீங்கள் செய்யும் தவறுகள் உங்களை மீண்டும் தாக்கலாம். நீங்கள் அதை உணரும் போது, காலம் கடந்து போயிருக்கும். இதுதான் உண்மை. உங்களுடைய குழந்தைகளுக்காக தாயாக இருக்கும் மனைவியை மதிப்பது, சிறப்பான குணம் மட்டுமன்றி அடிப்படையான குணம். இதை புரிந்து கொள்ளாதவர்கள் குறைந்தபட்சம் மரியாதையைக் கூட பெற முடியாது.

மனைவியை நேசிக்காமல் அவமதிப்பவர்கள் கொடூரமானவர்கள். அது மனைவியின் இதயத்தை நொறுங்க செய்யும். தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி கொள்ள நினைக்கும் மனிதன் முதலில் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற வேண்டும். எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பரஸ்பர மரியாதை இருக்கும் போது கடினமான காலத்தையும் நம்பிக்கையுடன் கடந்து செல்ல முடியும்.

உங்களின் உலகமே உங்கள் குடும்பம் தான். உங்களுக்கு என்றுமே உங்கள் குடும்பம் தான் ஆதரவளிக்கும். நண்பர்களை மதிப்பது நல்லது, ஆனால் அதே நேரத்தில் குடும்பம் முக்கியமானது. உங்கள் அன்பு, மரியாதை அனைத்தும் உங்கள் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அன்பின் பாதையில் இருந்து விலகிச் செல்வார்கள், என்று குஷ்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

More News

'கூலி' 'ஜெயிலர் 2' படங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படம்.. இயக்குவது இந்த பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது "வேட்டையன்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' வில்லன் நடிகர்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புரட்டாசி மாத சிறப்புகள் மற்றும் வழிபாடு

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இம்மாதம் தெய்வீக சக்தி மிகுந்த மாதமாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம் ஏற்படும் இந்த மாதத்தில், தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து,

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படப்பிடிப்பில் சுதா கொங்காரா.. வைரல் புகைப்படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில்

கூடிய சீக்கிரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர்றேன்.. அதுவரைக்கும் Wait and Watch: 'பிரதர்' டீசர்..!

ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.