NO என்றால் NO தான்: நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து குஷ்பு..!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை மற்றும் பாஜக பிரபலம் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவை செய்துள்ளார்.

அந்த பதிவில் ’பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும்போது பாலியல் வன்கொடுமைகளை சந்திப்பது திரையுலகில் மட்டுமின்றி எல்லாத் துறைகளும் இருக்கின்றன பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது.

இது குறித்து எனது மகள்களுடன் நான் நீண்ட நேரம் உரையாடினேன், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனே சொன்னால் நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இதை சொல்வதால் அவமானப்படுவோம் என்ற பயம் ஏன்? இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என்ற கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சொல்வதை கேட்க காதுகள் தேவைப்படுகிறது.

அனைவரிடமிருந்து உணர்ச்சிகரமான ஆதரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு பெண்ணாகவும் தாயாகவும் இந்த வன்முறைகளால் காயப்பட்ட பெண்கள் பெரும் சிக்கலை சந்திக்கின்றனர். என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பேசுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என்று என்னிடமே சிலர் கேட்கிறார்கள். நான் முன்னரே இந்த விஷயத்தை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆண்கள் பெண்களை மதிக்க வேண்டும், பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் ஈடுபட வேண்டும், ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். துன்பங்கள் அனுபவித்த பெண்களுடன் நான் நிற்கிறேன், ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது பல பெண்களுக்கு அவர்களுடைய குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு கிடைப்பதில்லை. இந்த கொடூரம் இதோடு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேச வேண்டும். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், NO என்றால் அது கண்டிப்பாக NO என தான் இருக்க வேண்டும். உங்கள் கண்ணியம் மரியாதையை ஒருபோதும் சமரசம் செய்யவேண்டாம் ’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

வந்தவாசி அதிசயம்: 1000 ஆண்டு பழமையான கோவில் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் மறைந்த பொக்கிஷம்: மீண்டும் கண்டெடுக்கப்பட்ட சிவன் கோவில்!

வெற்றிமாறனின் 'விடுதலை 2' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வெற்றிமாறன் நடிப்பில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

விஜய்யின் தவெக முதல் மாநாடு தேதி, இடம் இதுதான்.. முக்கிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

'சூர்யா 44' படத்தில் இணைந்த ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமா?

சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன்

நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி.. கைதாக வாய்ப்பா? 

நடிகை ரேகா நாயர் கார் மோதியதால் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அவர் கைதாக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.