இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.. தோழியின் குடும்பத்தை சந்தித்த குஷ்புவின் பதிவு!

  • IndiaGlitz, [Thursday,August 04 2022]

நமது தோழிகளை சந்திப்பதும் அவர்களுடன் பிரியாணி சாப்பிடுவதை விட வேறு சந்தோசம் எதுவும் இல்லை என நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது தோழியை சந்தித்தது குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது பதிவுகள் பெரும்பாலும் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவருடன் சில மணி நேரங்கள் செலவு செய்தது, பிரியாணி சாப்பிட்டது மற்றும் அவருடைய குழந்தைகளுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி இருந்தது என்றும் குஷ்பு தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் எங்களுடைய குழந்தைகளும் இந்த சந்திப்பில் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோஷம் அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா தொழிலதிபரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா சமீபத்தில் தனது குழந்தைகளுடன் சென்னை வந்திருந்த நிலையில் குஷ்பு அவரை தனது மகள்களுடன் சந்தித்தார். ரம்பா ஒரு இனிமையான இதயம் கொண்டவர் என்றும் அவரை நாங்கள் ரொம்ப மிஸ் செய்கிறோம் என்றும் மீண்டும் சந்திப்போம் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

குஷ்பு மற்றும் ரம்பா ஆகிய இருவரும் விஜய் நடித்த ’மின்சார கண்ணா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவுக்கு வாழ்த்து சொல்லி, யுவனுடன் செம ஆட்டம் ஆடிய அதிதி ஷங்கர்!

மதுரையில் நேற்று 'விருமன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், மேடையிலேயே யுவனுடன் செம ஆட்டம்

கத்தி பேசுறது, கத்தியை காட்டி பேசுறது எல்லாம் விருமனுக்கு பிடிக்காது: 'விருமன்' டிரைலர்

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'விருமன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

டெல்லியில் 10 கிமீ ஓடிய ரஜினியின் மகள்: வைரல் வீடியோ

தலைநகர் டெல்லியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 கிலோமீட்டர் ஓடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தன்னம்பிக்கையின் 30 வருடங்கள்: அஜித் குறித்து பிரபல இயக்குனரின் பதிவு

அஜித் திரை உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை

எஞ்சாய் எஞ்சாமி' சர்ச்சை: விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்

கடந்த சில நாட்களாக எஞ்சாய் எஞ்சாமி'  சர்ச்சை நீண்டுகொண்டே இருக்கிறது என்பதும் இதற்கு ஒவ்வொருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.