ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுகிறது: '96' குறித்து குஷ்பு

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

கடந்த வாரம் வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷாவின் '96' திரைப்படத்திற்கு நாலா பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படம் பார்த்த அனைவரும் தங்களுடைய பத்தாம் வகுப்பு தோழி, தோழர்களை இணையத்தில் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த படம் ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது.

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கும் படத்தில் நடித்த விஜய்சேதுபதி, த்ரிஷாவுக்கும் இயக்குனர் பிரேம்குமாருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் உண்மையான ரசிகையாக தான் மாறிவிட்டதாகவும், இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுவதாகவும் இந்த பணியை விஜய்சேதுபதி தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அவர் அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு ஒவ்வொரு விருதையும் வென்றுவிட வேண்டும் என்ற நினைக்கும் அளவுக்கு த்ரிஷா நடித்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ள அவருக்கு தனது பாராட்டுக்கள் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் ஒரு அற்புதமான படைப்பை தந்த பிரேம்குமாருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், எங்களை பள்ளி காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள் என்றும் குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.

More News

திருமணமான 10வது மாதத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமணமாகி பத்தே மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இவர் நடிக்காத படங்களே இல்லை

அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.