உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கைகளின் மூலம் தமிழக முதல்வருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் 100% இருக்கை அனுமதிக்கு ஒரு சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்றாகும். ஒரு சினிமாக்காரி ஆக நான் சிந்திக்கவில்லை. நாம் தற்போது ’கொரோனா வைரஸ்’ என்றும் ’சீனா வைரஸ்’ என்றும் அழைக்கின்றோம். 100 சதவீத இருக்கைகள் அனுமதியால் ’சினிமா வைரஸ்’ என்ற கெட்ட பெயரை நாம் எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வரையும் ஹீரோக்கள் மற்றும் திரையுலகிலகினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஒட்டுமொத்தமாக லாக்டவுன் ஆவதற்கு பதிலாக தற்போது ஏற்பட்டு வரும் சிறிய இழப்பு மேல்தான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று கவலைப்பட்டால் தயவுசெய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது தான். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு அழைத்து கட்டாயப்படுத்தவில்லை. உங்களை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

100% இருக்கைகள் அனுமதி அளித்துள்ளது குறித்து கஸ்தூரி மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் மாறுபட்ட கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.

நடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,5000 ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு மனநிலை மாறியதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு

நிவாரணத் தொகையை உயர்த்தி விவசாயிகளை குஷிப்படுத்திய தமிழக முதல்வர்… குவியும் பாராட்டு!!!

தமிழகத்தில் நிவர், புரெவி போன்ற புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர்

பேஷன் பட பீஜியமிற்கு பூனை நடை… இளம் நடிகையின் அசத்தல் வீடியோ!!!

பாலிவுட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் fashion. இந்தப் படத்தின் பீஜியம் அனைவராலும் விருப்பப்பட்டது.