கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: தமிழ் நடிகைகளின் ஆவேச கருத்து!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

பாஜக பொதுச்செயலாளராக இருந்த கேடி ராகவன் அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று நேற்று இணையதளத்தில் வைரலானதை அடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகைகளும் பாஜக பிரபலமுமான குஷ்பு மற்றும் காயத்ரி ரகுரம் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இன்று காலை எழுந்தவுடன் என் கண்களையே என்னால் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்தது என்றும், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்றும், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும் தெய்வம் கண்டிப்பாக தண்டிக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை குஷ்பு இதுகுறித்து கூறிய போது ’தமிழக பாஜகவிலும், தேசிய பாஜகவிலும் எனக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானது என்றும், கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் என்றும், ஆனால் அதே நேரத்தில் பாஜகவில் பெண்களை மதிப்பதே இல்லை என ஒட்டுமொத்தமாக கட்சியை குற்றம் கூறுவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகிய இருவரது கருத்துக்களுக்கும் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நடிகை தமன்னாவின் எழுத்தாளர் அவதாரம்… வியந்து கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது எழுத்தாளராக மாறியிருக்கிறார்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

விமர்சனங்களை தாண்டி, 20 வயதில் சாதிக்கும் சீரியல் நடிகை....!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிவரும் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் நாயகிதான் நடிகர் பிரியங்கா குமார்.

பாடபுத்தகங்களில்  தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....!சீமான் காட்டம்....!

பாடபுத்தகங்களில்  இடம்பெற்றுள்ள தமிழர்கள் வரலாறு அவதூறாக உள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகவே திட்டமிட்டு

போதைப்பொருள் விவகாரம்… நடிகை சஞ்சனா கல்ராணி சிறைக்கு செல்கிறாரா?

பாலிவுட் சினிமா உலகில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னரே போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது