மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் குரேஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன போது, அவரைப் பற்றி பேசலாமா என்று பிரியங்கா கேட்டபோது ரக்சன் ஓகே என்றார். ஆனால் மணிமேகலை, நீங்கள் பேச வேண்டாம். ஏற்கனவே நீங்கள் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பேச வேண்டாம் என்று பிரியங்காவிடம் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்து வெளியேறிவிட்டார்.

அதன் பின்னர், அடுத்த வாரம் ஷூட்டிங் நடக்கும் போது, தன்னை பேசவிடாமல் தடுத்ததை குறித்து பிரியங்கா பேசலாம் என்று நினைத்தார். ஒரு சக போட்டியாளராக, என்னுடைய பேச்சுரிமை அங்கு தடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் அதற்குள் மணிமேகலை வெளியேறி இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார்.

நான் அங்கு இருந்தவரை, மேனேஜ்மென்ட் அல்லது பிரியங்கா மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை என்னும் விஷயத்தை இங்கே எடுத்து வருகிறார். இங்கே எல்லோருக்கும் சுயமரியாதை உள்ளது. எனவே, பிரியங்காவை பேச அனுமதித்திருக்கலாம்.

உங்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கின்றது என்றால், அதை தனியாக பேசியிருக்கலாம். தனியாக பேசியிருந்தால், இந்த விஷயம் சுலபமாக முடிந்திருக்கும். ஆனால், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நேரத்தில் இப்படி சண்டை போட்டது எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருந்தது என்று குரேஷி கூறினார்.

இந்த விவகாரத்தில், மணிமேகலைக்கு ஆதரவாக பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், 5 நாட்கள் கழித்து குரேஷி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

More News

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,

ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது.. தலைமறைவாகியிருந்தது எங்கே? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது

நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு குஷி..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது