பிரபல நடிகரின் துப்பறியும் படத்திற்கு ஆர்யா வாழ்த்து!

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் ’பெல்பாட்டம்’ ஜெயதீர்த்தா என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி மட்டும் ஹரிப்பிரியா நடித்திருந்தனர். துப்பறியும் கதையாக அமைந்துள்ள இந்த படம் கன்னட மொழியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. பெல்பாட்டம் என்ற அதே டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சத்யசிவா இயக்க இருப்பதாகவும் சார்லஸ் இமானுவேல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் இந்த டுவீட்டுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ்பாண்ட் போல் துப்பறிய வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் ஹீரோவுக்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கின்றது. இந்த வேலையில் இருந்து கொண்டே அவர் மிகப்பெரிய குற்றத்தை கண்டுபிடித்துவிடுவார். அதனால் அவருடைய புகழ் பரவும். இந்த நிலையில் தான் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே நடக்கும் ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க ஹீரோ துப்பறிவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காதலும் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

ஆபாச படம் எடுப்பதாக கூறிய இயக்குனர் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது: 

'ஜுராசிக் பார்க்' உள்பட உலக புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மகன் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்

மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம்: பிரபல நடிகரின் புதிய முயற்சி

மதச்சார்பின்மை குறித்து பொது மேடையில் அரசியல்வாதிகள் பேசினாலும் உண்மையில் மத கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்

ரஜினியும் கமலும் சேர்ந்தால் ஒரே ஒரு நல்லது நடக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

வரும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்

"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த