அக்கவுண்டில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து மக்களுக்கு கொடுத்த பாலா.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் என ’கலக்கப்போவது யாரு’ பாலா கொடுத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருவெள்ளம் காரணமாக பொதுமக்கள் பலரும் தத்தளித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை பிரபலமான ’கலக்கப்போவது யாரு’ பாலா தன்னுடைய அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது ’சென்னை மக்கள்தான் என்னை வாழ வைத்தார்கள், என்னை வாழவைத்த சென்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய அக்கவுண்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்துள்ளேன்.

நான் முதன் முதலில் சென்னைக்கு வந்து இறங்கியது அனகாபுத்தூர் தான். எனவே அந்த பகுதி மக்களுக்கு உதவி செய்யவே இங்கு வந்தேன். நான் என்னுடைய சொந்த காசை கொடுத்துள்ளேன், இது டொனேஷன் எல்லாம் இல்லை’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த உதவியை அடுத்து பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

ஓடிடியில் ரிலீசாகும் தீபாவளி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான படங்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'ஜப்பான்' 'ஜிகர்தண்டா 2' மற்றும் 'ரெய்டு' ஆகிய மூன்று படங்களும்

நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப் போவது நிஜம்... 'மலைக்கோட்டை வாலிபன்' டீசர்..!

 மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல்

சரிதான் போடா... நிக்சனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா 'போடா' என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய

சூர்யா, கார்த்தியை அடுத்து வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்த இளம் ஹீரோ..!

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் அடிப்படை தேவை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும்