ரூ.2 லட்சம் நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் விஜய் ரசிகர்கள் முதல் நபராய் களத்தில் இறங்கி தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்து வருவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது இந்த கொரோனா காலத்தில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகள் செய்துள்ள நிலையில் கொல்லம் விஜய் ரசிகர்கள் ரூ.2 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கொல்லம் நண்பன்ஸ் பெயரில் கேரளாவில் செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்கள் இருதய கோளாறால் அவதிப்படும் அருண் என்ற ரசிகருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அதேபோல் நாள் முழுவதும் மக்களின் பாதுகாப்பில் உறுதுணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள PPE சாதனங்களையும், ஆன்-லைன் மூலம் படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு இலவச தொலைபேசிகளையும் வழங்கியுள்ளனர். மேலும் வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை எங்கள் சேவை தொடரும் எனவும் கொல்லம் நண்பன்ஸ் விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் செய்யும் சேவையை அனைத்து தரப்பட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.
 

More News

விக்ரம் இல்லாமலேயே முடிவடைகிறதா 'துருவ நட்சத்திரம்? பரபரப்பு தகவல் 

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால்

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் தமன்னா; டைட்டில் அறிவிப்பு

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் ஒரு இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சூரரை போற்று படத்தின் உண்மையான வியாபாரம் எவ்வளவு? பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக போகிறது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது: விநாயகர் சிலை விவகாரம் குறித்து உதயநிதி விளக்கம்

நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி

அப்படியே முகத்தில் குத்துவேன்… கேள்வியைச் சமாளிக்க முடியாமல் பத்திரிகையாளரை மிரட்டிய அதிபர்!!!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அதிபராக பதவி ஏற்றுக்கொண்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.