close
Choose your channels

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைக்கு விராத் கோஹ்லி செய்த நெகிழ்ச்சியான உதவி!

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயார் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிதி உதவி செய்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஷ்ரவந்தி நாயுடு. இவருடைய தாயார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டுமென ஷ்ரவந்தி ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசனை தொடர்பு கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராட் கோலி உடனடியாக ரூபாய் 6.77 லட்சம் ரூபாய் ஷ்ரவந்தி தாயாரின் சிகிச்சைக்காக அளித்துள்ளார். இது குறித்த தகவலை மற்றொரு கிரிக்கெட் வீராங்கனை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டதை அடுத்தே விராட் கோலி செய்த உதவி வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி மேலும் பலரும் ஷ்ரவந்தியின் தாயார் சிகிச்சைக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment