"கொடநாடு எஸ்டேட் என்னுடையது".. வருமான வரித்துறையிடம் தெரிவித்த சசிகலா.

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதற்கு சசிகலா சார்பில் அவரது ஆடிட்டர் தாக்கல் செய்துள்ள பதிலில், ஆயிரத்து 900 கோடி ரூபாய் பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் குறித்தும் எந்த தகவலும் தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாகவும், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்றும், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1-ல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி வரை பங்குதாரராக இருந்ததாகவும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகளையும், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும், மேவிஸ் சாட்காம் நிறுவனத்தின் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகளையும், ராம்ராஜ் அக்ரோமில்ஸ் நிறுவனத்தின் 36 ஆயிரம் பங்குகளையும் சசிகலா வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறையிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

"இந்தம்மா எங்களுக்கு வேண்டாங்க"..! புதுச்சேரி முதல்வர், குடியரசு தலைவரிடம் கோரிக்கை.

புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி ஆளுநர் கிரண் பேடியை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியுள்ளார்.

"மண்டல் கமிஷன் பற்றி தெரியாமல் போராடினேன்.. நான் சாதியவாதி அல்ல"..! அனுராக் காஷ்யப்.

"என் டீன் ஏஜ் காலத்தில் மண்டல் கமிஷனுக்கு எதிராக போராடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என தன்னை சாதியவதி என்றவர்களுக்கு அனுராக் காஷ்யப் பதில் கூறியுள்ளார்.

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் தமிழ்ப்பட நடிகர்!

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் இந்திய நடிகர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது

முகாமிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதிய சிறுவன்..! உலகமெங்கும் இருந்து குவிந்த பரிசுகள்.

டெக்ஸாஸில் 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம்தான் நெட்டிசன்கள் பலரை தற்போது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கி அசுரனில் முடிந்துள்ளது: ஜிவி பிரகாஷ்

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் தனக்கு சிறப்பான ஆண்டுகளாக இருந்ததாகவும் இந்த 10 ஆண்டில் தனக்கு பல வெற்றிப்படங்கள்