சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய சிஎஸ்கே, நாளை சென்னையில் கொல்கத்தாவை பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமே இருக்காது. 

இந்த நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் மைதானத்தை விட்டு வெளியே வந்த தினேஷிடம் ஒரு பெண், கிரிக்கெட் பந்தில் ஆட்டோகிராப் கேட்டார். அவர் அதில் கையெழுத்திட்டு போட்டபோது அருகில் நின்றிருந்த ஒரு தமிழர் இப்படியே போனால் ஐம்பது கையெழுத்து போடுவிங்க போல என்று கேட்டார். அதற்கு 'ஜி அந்தம்மாவை கலாய்க்காதீங்க என்று கூறிவிட்டு சிஎஸ்கே மாஸ்ஸா பண்ணினாங்க' என்று கூறினார். 

சிஎஸ்கே அணியுடன் மோதும் எதிரணியின் கேப்டனாக இருந்தபோதும் சிஎஸ்கேவை அவர் புகழ்ந்து பேசியது அவருக்கு இருக்கும் மண்ணின் பாசத்தை காட்டுவதாகவே தெரிகிறது.

இருப்பினும் களத்தில் தன்னுடைய அணியின் வெற்றிக்காக தினேஷ் கார்த்திக் தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.

More News

காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம்

காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்டது.

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம்

40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை

'40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?