சுஷாந்துக்காக கதறிய தமிழ் நடிகை! வைரலாகும் வீடியோ

அஜித் நடித்த ’வில்லன்’, விக்ரம் நடித்த ’ஜெமினி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்காக கதறி அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு ஒரு பக்கம் பாலிவுட் திரையுலகமே கண்ணீர் வடித்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் முன்னணி பிரமுகர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரதமர் மோடி முதல் பலர் இரங்கல் தெரிவித்து, அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலரும் சுஷாந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்த ’வில்லன்’ விக்ரம் நடித்த ’ஜெமினி’, சரத்குமார் நடித்த ‘அரசு’, விஜய் நடித்த ‘திருமலை’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நடிகை கிரண் ரத்தோட், சுஷாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு பக்கம் சுஷாந்த் சிரித்தபடி இருக்கும் பழைய வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் கிரண், கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில் அவர் ’சுஷாந்த் ப்ளீஸ் திரும்ப வாருங்கள்’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கல்வான் தாக்குதல் 4 ஆவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை!!! தற்போதைய நிலவரம் என்ன???

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் தொடங்கிய பதற்றம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நடிகர் செந்தில்

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய, சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

எங்கிருந்தாலும் வாழ்க: 60களில் கொடிகட்ட பறந்த பழம்பெரும் பாடகர் மறைவு

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும், கடந்த 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல காலத்தால் அழியாத பாடல்களைப்

திரும்பவுமா??? பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!!! விமான நிலையம், பள்ளிகள் மூடல்!!!

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டு வந்துவிட்டது. உலகின் மற்ற நாடுகள் எல்லாம் மரணப்பயத்தில் இருக்கும் போது பரவலுக்கு காரணமான சீனா மட்டும் நிம்மதியாக இருக்கிறது,

எரியுற தீயில எண்ணெய் ஊற்றும் நேபாளம்: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம்!!!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்  பகுதியில் பிரச்சனை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே நேபாளம் எல்லை வரையறைக் குறித்து இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிவந்தது.